Friday, 26 February 2021

தனித்திருந்தது பாதை
உதயத்தின் பொன்வெயில் உண்டு
மரக்கிளைகளில் கிரீச்சிடுகின்றன பறவைகள்
காற்றில் உருள்கின்றன சருகுகள்
உச்சி வெய்யில்
அந்திச் சோகம்
உண்டு
அந்த சாலை
ஓர் இன்மையை
ஒரு பிரிவை
ஒரு துயரைப் 
பகிராமல்
சொல்லாக்காமல்
மௌனம் கொள்கிறது
அந்த மௌனத்தைப்
புரிந்து கொண்டு
நடக்கிறேன்
காலையும்
மாலையும்