Wednesday, 17 March 2021

இந்த மௌனம் 
இன்னும் 
எத்தனை ரூபம் கொள்ளப் போகிறது
இன்னும்
எத்தனை அடர்த்தி அடையும்
எங்கோ
ஒரு செடி
வாய்ப்புகள் மிகக் குறைவான மண்ணில்
பிடிவாதமாக வேர் விட்டுக் கொண்டிருக்கிறது
ஒரு மலர்
ஆளரவமற்ற நிலத்தில்
மணம் வீசி மலர்கிறது
சொற்கள் இல்லை
ஒலிகள் இல்லை
மௌனம் மட்டுமே 
நிரம்ப
தொடரும் 
இந்த காலம் தான்
எத்தனை நீளம்
எத்தனை ஆழம்