இந்த மௌனம்
இன்னும்
எத்தனை ரூபம் கொள்ளப் போகிறது
இன்னும்
எத்தனை அடர்த்தி அடையும்
எங்கோ
ஒரு செடி
வாய்ப்புகள் மிகக் குறைவான மண்ணில்
பிடிவாதமாக வேர் விட்டுக் கொண்டிருக்கிறது
ஒரு மலர்
ஆளரவமற்ற நிலத்தில்
மணம் வீசி மலர்கிறது
சொற்கள் இல்லை
ஒலிகள் இல்லை
மௌனம் மட்டுமே
நிரம்ப
தொடரும்
இந்த காலம் தான்
எத்தனை நீளம்
எத்தனை ஆழம்