Saturday 14 August 2021

75 நாட்கள் / 75 நிமிடங்கள்


இந்திய சுதந்திரத்தின் பவள விழாவைக் கொண்டாடும் விதமாக ஒரு தன்னார்வ வாசிப்பு நிகழ்வை உருவாக்கியிருக்கிறேன். அதில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொள்ள உள்ளேன். அதற்கான விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளேன். 

1. இந்நிகழ்வு 15.08.2021 தொடங்கி 31.10.2021 வரை நடைபெறும். இந்திய சுதந்திர தினம் தொடங்கி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான தேசிய ஒருமைப்பாட்டு தினம் வரை. 78 நாட்கள். 

2. இந்திய சுதந்திரத்தின் பவள விழா ஆண்டைக் குறிக்கும் விதத்தில் ஒவ்வொரு நாளும் 75 நிமிடங்கள் புத்தக வாசிப்பை மேற்கொள்ள வேண்டும். 

3. அந்த 75 நிமிடங்கள் ஒரே அமர்வாக இருக்க வேண்டும்.

4. அதன் பின்னர் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்களும் வாசிக்கலாம். அதில் பகுதி அமர்வுகள் இருக்கலாம்.  ( உதாரணம் ; ஒருவர் ஒருநாள் காலை 6 மணிக்கு வாசிக்கத் துவங்குகிறார் எனில் காலை 7.15 வரை தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும். அதன் பின்னர் மாலை 6.30 க்கு வாசிக்கிறார் எனில் மாலை 7 மணி வரை அரைமணி நேரம் ஒரு அமர்வாக வாசித்து விட்டு பின்னர் 7.30 - 8 அடுத்த அமர்வாக வாசிக்கலாம். )

5. 75 நிமிட வாசிப்பு 78 நாட்களில் ஒருநாள் கூட விடுபடக் கூடாது. இந்த விதிமுறை நிகழ்வில் நமது தன்னார்வத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக. 

6. அமர்வின் துவக்கங்களும் அமர்வின் வாசிப்பு நேரமும் வாசிக்கும் புத்தகமும் ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்பட வேண்டும். நிகழ்வின் இறுதியில் அது ஓர் அட்டவணையாக்கப்பட வேண்டும். 

7. நூல் வாசிப்பு மட்டுமே வாசிப்பாக கருதப்படும். கிண்டிலில் நூல் வாசிக்கலாம்.

இந்த விதிமுறைகளின் படி, ஆர்வமுடையவர்கள் சுயமாக இந்த நிகழ்வில் பங்கெடுத்துக் கொள்ளலாம்!