பிரபு மயிலாடுதுறை
Saturday, 16 October 2021
தழல்
இன்று
நீ
சுடர்ந்து கொண்டிருக்கிறாய்
செந்தழல் அலைவுகளுடன்
உன் உவகைகள்
மழை பொழிந்த நிலத்தில்
நிறையும் பசுமையென
விரிகின்றன
உன் முன்னால்
ஒரு அன்பை
ஒரு சொல்லை
ஒரு பிரியத்தை
ஒரு வாழ்த்தை
சொல்லும் கணம்
மேலும்
நுண்மையாகிக் கொண்டேயிருக்கிறது
உன்னைப் போலவே
Newer Post
Older Post
Home