Sunday 24 October 2021

ஒரு வாசிப்பு

இன்று ஒரு மேற்கத்திய நாவலை வாசித்தேன். மரணத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டது. மிகக் குறைவான கதாபாத்திரங்கள். ஐரோப்பிய அகம் மரணத்தைக் கண்டு எப்போதும் அஞ்சியே இருந்திருக்கிறது. அந்த அச்சம் அவர்களுக்கு வாழ்க்கை மேலும் படர்ந்த படி இருக்கிறது. அது அவர்களை மரணம் குறித்த மர்மப்படுத்தலை மேலும் மேலும் என உருவாக்கச் செய்கிறது.  

ஜீவனின் நெடிய பயணத்தில் ஒரு ஜென்மம் என்பது குறிப்பிட்ட கால அளவே என்கிறது இந்திய மரபு. அந்த குறுகிய காலத்தில் தம் அருஞ்செயல்களால் விடுதலை பெற்றவர்கள் உண்டு. பல பிறவிகளில் - பல ஜென்மங்களில் - பிறந்து இளைத்தவர்கள் உண்டு. 

சாவு கொண்டாடப்படும் காசி மாநகரமே ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக  ஆராதிக்கும் நகராக இருந்திருக்கிறது.