’’பாரதி துதி’’ பதிவை வாசித்து விட்டு ஆதித்ய ஸ்ரீநிவாஸ் ஃபோன் செய்தான்.
’’அண்ணன்! உங்களுக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் இருக்காங்க’’
‘’அது ஒரு கோணத்துல உண்மை. முழு உண்மைன்னு சொல்ல முடியாது.’’
‘’அந்த இன்னொரு கவிஞர் யாருண்ணா?’’
‘’உன்னைப் போல் ஒருவர்’’
‘’ நீங்க நிறைய பேரோட பேசறீங்க. விவாதிக்கறீங்க.’’
‘’நானா பண்ற ஃபோன்கால் கம்ப்பேரிடிவ்லி ரொம்ப குறைச்ச தான். இடம் பொருள் ஏவல் னு சொல்லுவாங்க இல்லையா. இப்பவும் செல்ஃபோன் இல்லாம லேண்ட் லைன் மட்டும் இருந்தா எனக்கு இன்னும் கன்வீனியன்ட்டா இருக்கும்னு தோணிட்டே தான் இருக்கு. பார்க்கலாம்’’
‘’அண்ணா! ஆஃபிஸ் ஒர்க் பிரஷர் ரொம்ப இருக்கு. காலைல விழிச்சதுமே அன்னைக்கு இருக்கற ஆஃபிஸ் வேலை ஞாபகம் வந்திடுது. அதுவே ஒரு நெருக்கடியை உருவாக்கிடுது. சாயந்திரம் ஆஃபிஸ் முடிஞ்சும் அது கண்டினியூ ஆகுது.’’
‘’நீ ஒரு கிரியேட்டர். கிரியேட்ட்டிவ் பிராஸஸ் என்பது என்ன? நம்மோட அகத்துல ஒரு பகுதி எப்போதும் கூர்மையா இருக்கறது. நம்மையும் நம்ம சூழலையும் கூர்ந்து கவனிக்கறது. அத கான்ஷியஸ்ஸா செய்யணும்னு இல்லை. சப் கான்ஷியஸா நடக்கும். நம்ம மரபுல ’’சாட்சி பாவம்’’னு சொல்றாங்க.’’
‘’ஒர்க் பிரஷர் ரொம்ப கடுமையானது அண்ணா.’’
‘’மனுஷ உடம்பும் மனசும் உச்சபட்ச நெருக்கடியிலதான் உச்சபட்ச துல்லியத்தோட செயல்படுது’’
‘’நீங்க உங்க கான்செப்ட்டை கன்வின்சிங்கா சொல்லி அக்செப்ட் பண்ண வச்சிருவீங்க. ஆனா அதை எக்ஸிகியூட் பண்றது அவ்வளவு ஈசியா இல்ல’’
‘’நான் யாரையும் கன்வின்ஸ் பண்ண நினைக்கறது இல்ல. உரையாடற எல்லாரோடயும் சேந்து யோசிக்கறன். விவாதிக்கறன்.’’
‘’அண்ணா! நான் என்னோட படைப்புலகத்தை என்னோட அக உலகத்துக்கு நெருக்கமா மட்டுமே வச்சுக்க பிரியப்படறன். நான் பாக்கற உத்யோகம் என்னோட புற உலகம். அது பெருசா பிரம்மாண்டமா நம்மால வகுக்க முடியாததா இருக்கு. அதுல இருந்து என்னோட அக உலகத்தை எவ்வளவு தள்ளி வச்சுக்கிறனோ அந்த அளவுக்கு நல்லதுன்னு நான் பழகியிருக்கன்’’
’’சங்க கவிதைகள்ல அகம் சார்ந்து எழுதன புலவர்கள் தான் புறம் சார்ந்தும் எழுதியிருக்காங்க இல்லையா?’’
ஆதித்யா அமைதியாக இருந்தான்.
நான் சொன்னேன் : ‘’ஆனா அது கிரியேட்டரோட சாய்ஸ்’’
’’நானும் என்னோட தினசரி அனுபவங்கள எழுதலாம்னு சொல்றீங்களா?’’
‘’எழுதுன்னுதான் நான் சொல்வேன்.’’
‘’அது வேற உலகம்’’
‘’அந்த உலகத்தையும் உன்னோட கிரியேட்டிவ் சென்ஸ்ஸால அணுகிப் பாரு. என்ன நடக்குதுன்னு பாக்கலாம்’’