Saturday 30 October 2021

பாரதி துதி

எனது நண்பன் ஒருவன் கவிஞன். மத்திய அரசாங்க ஊழியன். இப்போது கோரக்பூரில் குடித்தனம்.  ஒரு வலைப்பூவை உருவாக்கி எழுதி வருகிறான். தான் அவ்வப்போது எழுதும் கவிதைகளைப் பதிவிடுவான். சாதாரணமாக என்னுடன் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பேசுவான். அலுவலகத்தில் வேலை கடுமையாக இருந்தால் அவன் பேசுவதன் இடைவெளி அதிகரிக்கும்.  இடைவெளி அதிகமானால் நானே அழைப்பேன். நேற்று அவனை அழைத்தேன். 

‘’என்னப்பா! பேசி ரொம்ப நாளாச்சு. ஐ ஹோப் ஆல் இஸ் ஃபைன்’’

‘’ஆல் இஸ் வெல். ஆஃபிஸ்ல ஆடிட் முடிஞ்சுதுல்லயா! கொரிஸ் க்கான ரிப்ளையை என்னை தயார் பண்ண சொல்லிட்டாங்க. அதான் ஃபோன் பேச முடியல’’

‘’உன்னோட பிளாக் பாத்தன். கடைசியா மே மாசம் புது போஸ்ட் போட்டிருக்க. அதுக்கப்பறம் ஏன் அவ்வளவு பெரிய இடைவெளி’’

’’புதுசா எழுதுன சில போயத்தை அப்டேட் செய்யணும். ஆஃபிஸ் ஒர்க் பிரஷர் ரொம்ப இருக்கு’’

‘’நீ ஏன் உன்னோட ஆஃபிஸ் அனுபவங்கள எழுதக் கூடாது?’’

‘’அப்படியா சொல்றீங்க’’

‘’நிச்சயமா எழுதணும். உ.வே.சாமிநாத ஐயரோட என் சரித்திரத்தில ஒரு இடம் வருது. அவரோட மாஸ்டர்ல ஒருத்தர் சொல்வாராம் : நாம படிச்சத ஒரு கம்பத்துக்கிட்டயாவது பாடம் சொல்லணும்னு. படிச்சத கத்துக்கிட்டத திரும்ப திரும்ப சொல்லும் போது தான் அது மனசுல ஆழமா உறுதியாகும்னு.’’

‘’நீங்க சொல்றத நான் கன்சிடர் பண்றன்’’

‘’இந்திய மரபு ஆய கலைகள் 64ன்னு சொல்லுது. அந்த 64 கலைகளுக்குமான தெய்வம் வாணி. எந்த ஒரு கலைஞனும் தனது கலையை - கலை உணர்வை - தனது படைப்பை வெளிப்படுத்தும் போது கலைவாணி மகிழ்ச்சி அடைகிறாள். எல்லா கலை வெளிப்பாடுமே பாரதிக்கு செய்யப்படும் வெவ்வேறு விதமான துதிகள் தான். அதனால தொடர்ந்து எழுது. உன் ஆஃபிஸ் அனுபவங்களையும் எழுது. எழுத்துக்கு எல்லாமே நிமித்தம் தான்.’’ 

***

தொடர்ச்சி... 

(பாரதி துதி பதிவுக்குப் பின்னர் நிகழ்ந்த உரையாடல் அதே பதிவுடன் பின்னர் இணைக்கப்பட்டது)

***

 ’’பாரதி துதி’’ பதிவை வாசித்து விட்டு ஆதித்ய ஸ்ரீநிவாஸ் ஃபோன் செய்தான். 

’’அண்ணன்! உங்களுக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் இருக்காங்க’’ 

‘’அது ஒரு கோணத்துல உண்மை. முழு உண்மைன்னு சொல்ல முடியாது.’’

‘’அந்த இன்னொரு கவிஞர் யாருண்ணா?’’

‘’உன்னைப் போல் ஒருவர்’’

‘’ நீங்க நிறைய பேரோட பேசறீங்க. விவாதிக்கறீங்க.’’

‘’நானா பண்ற ஃபோன்கால் கம்ப்பேரிடிவ்லி ரொம்ப குறைச்ச தான். இடம் பொருள் ஏவல் னு சொல்லுவாங்க இல்லையா. இப்பவும் செல்ஃபோன் இல்லாம லேண்ட் லைன் மட்டும் இருந்தா எனக்கு இன்னும் கன்வீனியன்ட்டா இருக்கும்னு தோணிட்டே தான் இருக்கு. பார்க்கலாம்’’ 

‘’அண்ணா! ஆஃபிஸ் ஒர்க் பிரஷர் ரொம்ப இருக்கு. காலைல விழிச்சதுமே அன்னைக்கு இருக்கற ஆஃபிஸ் வேலை ஞாபகம் வந்திடுது. அதுவே ஒரு நெருக்கடியை உருவாக்கிடுது. சாயந்திரம் ஆஃபிஸ் முடிஞ்சும் அது கண்டினியூ ஆகுது.’’

‘’நீ ஒரு கிரியேட்டர். கிரியேட்ட்டிவ் பிராஸஸ் என்பது என்ன? நம்மோட அகத்துல ஒரு பகுதி எப்போதும் கூர்மையா இருக்கறது. நம்மையும் நம்ம சூழலையும் கூர்ந்து கவனிக்கறது. அத கான்ஷியஸ்ஸா செய்யணும்னு இல்லை. சப் கான்ஷியஸா நடக்கும். நம்ம மரபுல ’’சாட்சி பாவம்’’னு சொல்றாங்க.’’

‘’ஒர்க் பிரஷர் ரொம்ப கடுமையானது அண்ணா.’’

‘’மனுஷ உடம்பும் மனசும் உச்சபட்ச நெருக்கடியிலதான் உச்சபட்ச துல்லியத்தோட செயல்படுது’’

‘’நீங்க உங்க கான்செப்ட்டை கன்வின்சிங்கா சொல்லி அக்செப்ட் பண்ண வச்சிருவீங்க. ஆனா அதை எக்ஸிகியூட் பண்றது அவ்வளவு ஈசியா இல்ல’’

‘’நான் யாரையும் கன்வின்ஸ் பண்ண நினைக்கறது இல்ல. உரையாடற எல்லாரோடயும் சேந்து யோசிக்கறன். விவாதிக்கறன்.’’

‘’அண்ணா! நான் என்னோட படைப்புலகத்தை என்னோட அக உலகத்துக்கு நெருக்கமா மட்டுமே வச்சுக்க பிரியப்படறன். நான் பாக்கற உத்யோகம் என்னோட புற உலகம். அது பெருசா பிரம்மாண்டமா நம்மால வகுக்க முடியாததா இருக்கு. அதுல இருந்து என்னோட அக உலகத்தை எவ்வளவு தள்ளி வச்சுக்கிறனோ அந்த அளவுக்கு நல்லதுன்னு நான் பழகியிருக்கன்’’

’’சங்க கவிதைகள்ல அகம் சார்ந்து  எழுதன புலவர்கள் தான் புறம் சார்ந்தும் எழுதியிருக்காங்க இல்லையா?’’

ஆதித்யா அமைதியாக இருந்தான். 

நான் சொன்னேன் : ‘’ஆனா அது கிரியேட்டரோட சாய்ஸ்’’ 

’’நானும் என்னோட தினசரி அனுபவங்கள எழுதலாம்னு சொல்றீங்களா?’’

‘’எழுதுன்னுதான் நான் சொல்வேன்.’’

‘’அது வேற உலகம்’’

‘’அந்த உலகத்தையும் உன்னோட கிரியேட்டிவ் சென்ஸ்ஸால அணுகிப் பாரு. என்ன நடக்குதுன்னு பாக்கலாம்’’