Saturday 27 November 2021

மரபு

தமிழ் நாட்டில் மரபான தமிழ்க்கல்வி என்பது ஆறு அல்லது ஏழு வயதில் துவங்கியிருக்கிறது. இலக்கிய இலக்கண நூல்களை மனப்பாடம் செய்ய வேண்டும். ஆசிரியர் அந்நூல்களின் செய்யுள்களை பதம் பிரித்து சொல்லும் பாடத்தைக் கேட்டுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விதம் கற்க வேண்டும்.  இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேதங்கள் இவ்வாறே பயிலப்பட்டு வந்தன. சொல் என்னும் விதை மனம் என்னும் நிலத்தில் ஊன்றப்பட்டு முளைத்தெழும் வகையிலான கல்வி முறை அது.  வேதம் எழுதாக் கிளவியாக பல தலைமுறைகளுக்கு அளிக்கப்பட்டதும் அவ்வாறே. வேத பாடசாலைகளின் வடிவத்திலேயே மரபான தமிழ்க்கல்வியும் நிகழ்ந்திருக்கிறது. நடைமுறைக் கணிதமும் இங்கே மனப்பாடமாக இருந்திருக்கிறது. 

மரபான தமிழ்க்கல்வி இன்று மிக எளிய வடிவத்திலாவது ஏதேனும் ஒரு விதத்தில் தொடர வேண்டும். தமிழின் மிக முக்கியத் தேவை இது.