Tuesday 7 December 2021

கண்ணீர்

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது. 

எனது நண்பர் ஒருவரின் சொந்த ஊர் சிதம்பரம். அங்கே தேர் வீதி ஒன்றில் அவருடைய நண்பருக்கு மிகப் பெரிய இடம் ஒன்று இருந்தது ; இருக்கிறது. அதனை விற்பனை செய்ய வேண்டும் என அவர் விரும்பினார். என்னுடைய நண்பர் என்னை அழைத்துக் கொண்டு போய் அதனைக் காட்டினார். நகரின் மையப்பகுதியில் அமைந்த இடம். 

‘’சார் ! இந்த இடத்தை விக்கறதை விட அபார்ட்மெண்ட் கட்டி வித்தா உங்களுக்கு நல்ல லாபம்’’

‘’அப்படியா சொல்றீங்க?’’

நான் அவருக்கு விளக்கிச் சொன்னேன். 

‘’சார் ! இது என்னோட அட்வைஸ். அவசியம் அபார்ட்மெண்ட்ஸ் கட்டுங்க. நான் தான் அந்த ஒர்க் செய்யணும்னு அவசியம் இல்லை. நாங்க எப்பவுமே நம்பற விஷயம் நாம எந்த ஒர்க் செய்யணுங்கறத எல்லாத்துக்கும் மேல இருக்கற ஒன்னு தான் தீர்மானிக்குது. ஆனா ஒரு பில்டரா நான் இந்த இடத்துக்கு இந்த அட்வைஸ் தான் பெஸ்ட்ன்னு நிச்சயமா சொல்லுவன்.’’

நிலத்தின் உரிமையாளர் கண்ணீர் சிந்தி விட்டார். 

‘’நாம பாத்து பத்து நிமிஷம் தான் ஆகுது. ஆனா என்னோட நல்லதுக்காக அட்வைஸ் பண்றீங்க. என்னோட சொந்தக்காரங்க எத்தனையோ பேர் இருக்காங்க. ஒருத்தர் கூட என் மேல பொறாமை இல்லாம இருந்ததில்லை சார்’’   

எல்லாரும் நலமுடன் இருக்கும் இடத்தில் தான் நாமும் நலமாக இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டேன்.