Tuesday 13 September 2022

நுழைவு - 3

மூன்று நாட்களாக ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் உணவு என்ற நிலையை அடிப்படையாக உண்டாக்கிக் கொண்டேன். பசியும் சோர்வும் இருக்கிறது. அவற்றைத் தாக்குப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. 

பொதுவாக எவ்விதமான பயிற்சியும் அளிக்கப்படும் போது அதிகாலையிலிருந்து இரவு வரை நேரத்தைப் பிரித்திருப்பார்கள். இடைவெளிகள் குறைவாக இருப்பது பயிற்சியில் ஈடுபடுப்வர்கள் மனத்தை முழுமையாக பயிற்சியின் பால் செலுத்த உதவிகரமாக இருக்கும். நாளை முதல் அவ்வாறு அதிகாலை முதல் இரவு வரை நேரத்தை வகுத்துக் கொள்ளலாம் என உள்ளேன். 

நாம் நமது நேரத்தை எவ்வாறு வகுத்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகிறோமோ அதற்கும் நாம் நமது நேரத்தை நம் பழக்கத்தின் அடிப்படையில் செலவிடுவதற்கும் பெரிய வேற்றுமை உள்ளது. அதை நாம் கவனித்தால் அது குறித்து ஆக்கபூர்வமாக செயல்படுவோம்.