Monday 12 September 2022

நுழைவு - 2

இன்று உடல் சற்று சோர்வாக இருந்தது. எனினும் உள்ளுணர்வு இந்த விரதத்தை எண்ணியவாறு நிறைவு செய்வேன் என்று கூறியது. 

இன்று ஒரு நூலில் சில பக்கங்கள் வாசித்தேன். 

நண்பர் ஒருவர் வெளியூர் சென்றிருக்கிறார். ரயிலில் ஊர் திரும்புகிறார். நாளை காலை 6 மணிக்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தன்னை அழைக்க காரில் வர முடியுமா என்று கேட்டார். எனக்கு விரத நினைவு இல்லை. சரி என்று சொல்லி விட்டேன். பின்னர் தான் நினைவு வந்தது. டிரைவிங் தெரிந்த ஒருவரை ஏற்பாடு செய்து கொண்டேன். 

எண்பதும் எண்பதும் நூற்று அறுபது கிலோமீட்டர் பயணிப்பது என்பது உடலின் சக்தியை பெருமளவு எடுக்கும். 

நிலுவையில் இருக்கும் சில பணிகள் குறித்து யோசித்தேன். உண்மையில் ஒருநாள் பொழுதில் நிறைய நேரம் கிடைக்கிறது. மனம் வழக்கமாக இயங்கும் செயல்முறையிலிருந்து மாற்றம் கொண்டு யோசிக்க அவகாசம் வாய்க்கிறது.