பிரபு மயிலாடுதுறை
Sunday 16 October 2022
பிறவி
எல்லா நாளும் பிறக்கிறது
முதல் சூரியக் கதிர்
எல்லா நாளும் பிறந்து
மலர்கின்றன
வான் நோக்கும் மலர்கள்
ஒவ்வொரு கணமும்
நகர்ந்து கொண்டேயிருக்கும்
நதியின் பிறப்பு
எப்போதும் நிகழ்கிறது
கடலில் பிறந்தவள் திருமகள்
என
கதைசொன்னாள்
ஓர் அன்னை
தன் குழந்தைக்கு
Newer Post
Older Post
Home