Saturday 15 October 2022

சிலிர்ப்பு

தி. ஜானகிராமன் என்ற மகத்தான மாபெரும் கலைஞனின் ஆகச் சிறப்பான கதைகளில் முதன்மையானது ‘’சிலிர்ப்பு’’. 

பிறரைத் தான் என உணரச் செய்யும் கணம் மானுடர்களுக்கு எப்போதோ எப்படியோ வாய்த்து விடுகிறது. ஒரு கணமேனும் அதனை உணராத மானுடர்கள் என எவரும் இல்லை. 

ஆறு வயதும் பத்து வயதும் கொண்ட இரு குழந்தைகள் திருச்சிராப்பள்ளி - மாயவரம் பயணிகள் வண்டியில் பயணிகளாகப் பயணிக்கிறார்கள். வெள்ளை உள்ளம் கொண்ட மாசின்மையின் புனிதம் நிறைந்த இரண்டு குழந்தைகள். அந்த குழந்தைகளின் பெற்றோர் அன்றாடங்காய்ச்சிகள். அதன் விளைவாக அந்நிலையின் சிரமங்களை எதிர்கொள்ள அக்குழந்தைகளுக்கு நேர்கிறது. 

கும்பகோணம் வரை செல்லும் குழந்தை தன் அன்னையிடம் சென்று கொண்டிருக்கிறது. மாயவரம் செல்ல வேண்டிய குழந்தை தன் அன்னையிடமிருந்து பிரிந்து வந்து கொண்டிருக்கிறது. 

கல்லும் கரையும் வண்ணம் எழுதப்பட்ட கதை தி. ஜானகிராமனின் ‘’சிலிர்ப்பு’’.