Thursday 20 October 2022

வெங்கிடு சார் ஏன் ஓடினார்?

வெங்கிடு ஓர் அப்பாவி. மன்னார்குடியில் குடியிருக்கிறார். மன்னார்குடி அக்கம்பக்கம் உள்ள கிராமங்களுக்கு மையமான ஊர். ஆஸ்பத்திரி, கோவில், கல்யாண மண்டபம் , பள்ளிக்கூடம் என பல விஷயங்கள் இருக்கும் ஊர். சொந்தக்காரர்கள் தொடர்ந்து விருந்துக்கு வந்து விடுகிறார்கள். பல நாட்கள் இருந்து விருந்துண்டு விட்டு ஏதேனும் குறை சொல்லி விட்டி போய் விடுகிறார்கள். இது பல வருடமாக வெங்கிடு சாருக்கு வாடிக்கையாகப் போய் விட்டது. இவரால் இதனைச் சமாளிக்க முடியவில்லை.  

பல நாட்கள் இருந்த விருந்தை ‘’ஒரு வழியாக’’ வண்டியேற்றி விட்டு விட்டு வீட்டில் ‘’அப்பாடா’’ என்று இருக்கும் போது ஒரு சிறுவன் பசி என்று பிச்சை கேட்கிறான். வீட்டில் உணவு ஏதும் இல்லை. சில்லரைக் காசுகளைத் தருகிறார். ஒரு கணத்தில் அவன் இவரை ஏமாற்றி இருக்கிறான் எனப் புரிந்து கொண்டு அவனைத் துரத்திக் கொண்டு தெரு தெருவாக ஓடுகிறார். அவன் சிறுவன். சிட்டாகப் பறந்து விடுகிறான். 

ஒரு பெட்டிக்கடையில் கடன் சொல்லி லைம் ஜூஸ் வெங்கிடு சார் குடிக்கும் போது சிட்டான பையன் அதே கடைக்கு வந்து கம்பீரமாக சோடா ஆர்டர் செய்கிறான். இருவரும் பரஸ்பரம் பார்த்துக் கொண்ட பின் சிட்டு ஓடுகிறான். வெங்கிடு துரத்துகிறார். வெங்கிடு ஓட்டத்தின் போது கீழே விழுகிறார். சிறுவன் அவர் அளித்த காசை அவரிடம் வீசி விட்டு ஓடி விடுகிறான்.