Wednesday 19 October 2022

கோதாவரிக் குண்டு

மனிதர்கள் செலவழிக்கும் விதமும் பொருளீட்டும் அளவும் நேர் விகிதத்தில் இருப்பதில்லை. நடுத்தர வர்க்கத்துக்கு அனாதி காலமாக இருக்கும் சிக்கலே இதுதான். ஒரு நடுத்தரவர்க்க ஆசாமி பழைய ஆறு மாத செய்தித்தாளை பழைய பேப்பர்காரரிடம் எடைக்குப் போட்டு ஆறு ரூபாய் தேற்றுகிறார். அவரது மனைவியின் சினேகிதி அதில் ஒரு ரூபாயை தன் வீட்டின் கோதாவரிக் குண்டு பாத்திரத்தை அடகாக வைத்து கடனாக வாங்கிப் போகிறார். அன்று மாலை அந்தப் பெண்மணியின் கணவனை கடைத்தெருவில் பார்க்கிறார். அவள் கடனாக ஒரு ரூபாய் பெற்றது எதற்காக என அறிய நேரிடும் போது ஒரு மெல்லிய அதிர்ச்சி அவருக்கு உண்டாகிறது. சுவாரசியமான கதை.