Saturday 29 October 2022

மரமும் செடியும்

தஞ்சை மாவட்டம் நீர் மிகுந்திருக்கும் மாவட்டம். பயிர் வளரத் தேவையாயிருக்கும் நீர் அதிகமாக இருக்கிறது என்பதும் சமயத்தில் மிகையாகப் பெய்யும் மழையால் பயிர் பாதிக்கப்படுகிறது என்ற அளவில் தண்ணீரின் இருப்பு இருக்கிறது என்பதும் இந்த மாவட்டத்தின் இயல்பு. மிகுந்திருக்கும் ஒன்றை தஞ்சை மாவட்டத்துக்காரர்கள் ‘’மிதந்து கிடக்கு’’ என்பார்கள். பொருளோ அதிகாரமோ கொண்டுள்ள ஒருவனை ‘’மிதக்கிறான்’’ என்பார்கள்.  

இந்த ‘’மிதப்பு’’ மிக நூதனமாக சில விஷயங்களை யோசிக்க வைக்கும் ; செய்ய வைக்கும். அவ்வாறான ஒரு விஷயம் நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் நடக்கவே நடக்காது என்றும் சொல்லி விட முடியாது. 

‘’மரமும் செடியும்’’ அவ்வாறான ஒன்று.