Saturday 29 October 2022

கண்டாமணி

மார்க்கபந்து ஒரு சிறிய உணவகம் நடத்தி வருகிறார். சுகாதாரமான உணவை பார்த்து பார்த்து வழங்கும் அவருடைய கடையின் உணவில் அவரை அறியாமல் சிறு நஞ்சு கலந்து  விடுகிறது. அதனை மார்க்கபந்து கவனித்து விடுகிறார். ஆனால் அந்த உணவு ஒரே ஒரு நபருக்கு பரிமாறப்பட்டு விடுகிறது. அடுத்த நாள் காலை அந்த உணவை உண்டவர் இறந்து விடுகிறார். அவர் இறப்புக்கு சிறு நஞ்சு தான் காரணமா என அறுதியிட்டுக் கூற முடியாது. சிறு நஞ்சு சர்வ நிச்சயமாக இறந்து போனவர் உணவில் கலந்திருந்தது என்றும் கூறிட முடியாது. இப்படியான ஒரு நிலை. ஊர் சிவன் கோவிலுக்கு ஒரு கண்டாமணியை வாங்கி தானமாகக் கொடுக்கிறார். ஒவ்வொரு வேளை பூசனையின் போதும் கண்டாமணி ஒலிக்கிறது. அந்த ஒலி அவர் எதை மறக்க நினைக்கிறாரோ அதை அவர் நினைவில் கொண்டு வந்து விடுகிறது.