Saturday 29 October 2022

ஐயரும் ஐயாறும் ( ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை)

எந்த ஒரு கலையையும் கலை உணர்வுடன் அணுகுவதே உத்தமமான மார்க்கம் என்று கலைஞர்கள் எண்ணுவார்கள்.  ஆராய்ச்சி என்ற பெயரில் கலை உணர்வுக்கு அன்னியமான விஷயங்களை கலையின் மேலும் கலைஞனின் மேலும் செலுத்துவதை கலைக்கும் கலைஞனுக்கும் நிகழ்த்தும் வன்முறையாகவே எந்த கலைஞனும் எண்ணுவான். அதனைக் குறித்து தி.ஜா ஹாஸ்யமாக எழுதிய சிறுகதை ‘’ஐயரும் ஐயாறும் ( ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை)’’.