Saturday 29 October 2022

வீடு

வீட்டினை அகம் என்ற சொல்லாலும் குறிக்கிறது தமிழ். அகத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இருப்பாகவும் வீடு திகழ்கிறது. விருப்பாயினும் வெறுப்பாயினும் அது அகத்தில் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. வீட்டினை இனிமையாக உணரும் ஒருவன் அந்த வீட்டில் தனக்கு ஒரு துரோகம் நிகழ்ந்த பின் அதனை நரகமாக எண்ணத் துவங்குகிறான். நரகமாக எண்ணிய பின்னும் அவன் ஏன் அங்கேயே இருக்கிறான் என்னும் கேள்விக்கான பதிலில் வாசக இடைவெளியைக் கொடுத்து நிறைவு செய்கிறார் தி. ஜா , ‘’வீடு’’ சிறுகதையில்.