Wednesday 26 October 2022

துணை

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் தனது 28வது வயதில் அரசுப் பணியில் சேர்ந்தார். முப்பது வருஷம் சர்வீஸ் முடித்து ஓய்வு பெற்றார். பின்னர் இதுவரை முப்பத்து இரண்டு ஆண்டுகள் ஓய்வூதியம் பெற்றிருக்கிறார். இப்போது அவருக்கு வயது 90. அவர் ஓய்வூதியம் பெற்றிருக்கும் ஆண்டுகள் பணி புரிந்த ஆண்டுகளை விட அதிகம். பணியில் இருந்த போது கடைசியாகப் பெற்ற ஊதியத்தை விட அதிகமான தொகையை இப்போது ஓய்வூதியமாகப் பெற்றுக் கொண்டு இருக்கிறார்.  

இவ்வாறான வயசாளிகள் மிகுந்திருக்கும் குடும்பம் ஒன்றின் கதையை ஹாஸ்யமாகக் கூறியிருக்கிறார் தி. ஜா, ‘’துணை’’ சிறுகதையில்.