Saturday 15 October 2022

அடுத்த

மயிலாப்பூரில் வசிக்கும் கோபால் ராவ் ஒரு ஹோட்டல் சிப்பந்தி. கூடமும் அறையும் ஒன்றாக இருக்கும் ஒரு வீட்டில் மனைவி மற்றும் எட்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சில குழந்தைகள் அம்மாவின் பிரசவத்துக்கு உதவும் வயதில் இருக்கின்றன. சில குழந்தைகள் அம்மா பிரசவ வலியால் சிரமப்படுவதை புரிந்து கொள்ள இயலாத வயதில் உள்ளன. அண்டை வீட்டுக் காரர்களும் நண்பர்களும் ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்கிறார்கள். வண்டி வருவதற்குள் பிரசவம் ஆகி விடுகிறது. அடுத்த பிரசவத்துக்கு ஆம்புலன்ஸை முன்கூட்டியே வரும் விதத்தில் ஏற்பாடு செய்து விட வேண்டும் என்று சொல்கிறார் கோபால் ராவ் ! 

கதையில் இடம் பெறும் சில வரிகள் புன்னகைக்க வைப்பவை. 

‘’ஜனங்கள் நாலு எட்டு பதினாறு என்று பெருகினால் உணவுப் பொருள் நாலு ஆறு எட்டு என்று தான் பெருகுமாம். சரியாக ஞாபகம் இல்லை’’

‘’இந்த வாசுவோட நின்னு போயிடுச்சுன்னு நினைச்சன். பகவான் இன்னும் சோதிக்கிறார் மாமி. ‘’

‘’இந்த மாதிரி ஒரே ரூமில் குடித்தனம் பண்றவாளையும் நாப்பது சம்பளம் வாங்கறவாளையும் சோதிக்கா விட்டால் பகவான் என்று சொல்ல முடியுமா அவரை?’’