Wednesday, 28 December 2022

நன்றி

என்னுடைய வலைப்பூவின் வாசகர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். ‘’காவிரி போற்றுதும்’’ தொடர்பான சிறு சிறு பணிகளைக் கூட நான் பதிவு செய்வேன். எனினும் 14 மரங்கள் தொடர்பான எந்த விஷயத்தையும் நான் 15 மாதங்களுக்கு மேலாக பதிவு செய்யாமல் இருந்தேன்.  மென்மையான அகம் கொண்ட எவருக்கும் அந்த 14 மரங்கள் வெட்டப்பட்ட விதம் அதிர்ச்சியளிக்கக்கூடும் என்பதால் அதனைப் பற்றி எதுவும் எழுதாமல் இருந்தேன். தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலை உண்டான போது அதைப் பற்றி எழுத வேண்டியதாயிற்று. அது எழுதப்பட்டதிலிருந்து இன்று வரை பலர் என்னைத் தொடர்பு கொண்டு ‘’நாங்கள் உடனிருக்கிறோம்’’ என்று தெரிவித்து வருகிறார்கள். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளை தங்கள் பணியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் எனக்கு மிக நெருக்கமான நண்பர்கள். கணிசமானோர் இந்த விஷயத்தை அறிந்த பின் என்னுடன் தொடர்பு கொண்டு நண்பர்கள் ஆனவர்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை பேரின் அன்பும் அக்கறையும் பிரியமும் கரிசனமும் என்னை மேலும் பொறுப்புள்ளவனாக ஆக்குகிறது. 

நாம் பலவிதங்களிலும் இந்த விஷயத்துக்குத் தொடர்ந்து நியாயம் கேட்கப் போகிறோம்.