Tuesday 17 January 2023

எண்ணங்கள் மலர்க

நாம் எப்போதும் குறிப்பிடுவதைப் போல ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. ஒரு கிராமம் என்ற அலகில் தன் பொதுப்பணியை ஆற்ற ‘’காவிரி போற்றுதும்’’ முயல்கிறது. நாம் மக்களை இணைக்க முயல்கிறோம். ஆக சாத்தியமான வழிகளில் எல்லாம் மக்களை இணைக்க முயல்கிறோம்.  

நமது வலைப்பூவின் வாசகர்கள் உலகெங்கும் உள்ளனர். அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை ‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளன் என்ற முறையில் முன்வைக்கிறேன். 

வலைப்பூவின் வாசகர்கள் எவருக்கேனும் இன்ன விதமான பொதுப்பணி நிகழ வேண்டும் என்று எண்ணமிருந்தால் அதனை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். சிந்தனை என்பதை செயலின் அடிப்படையாகக் காண்கிறது ‘’காவிரி போற்றுதும்’’. எண்ணமே செயலாகிறது என்பதால் எண்ணங்களும் செயல் அளவுக்கே முக்கியமானவை. 

வாசகர்கள் ஒரு கிராமத்தில் நிகழ வேண்டும் என நினைக்கும் ஒரு பொதுப்பணியை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பி வைக்கவும். பொதுப்பணி குறித்த வாசகர்களின் எண்ணங்கள் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு பெரிய அளவில் உதவி செய்யும். அவற்றைக் குறித்து நாமும் யோசிக்கலாம். அனைவரும் யோசிக்கலாம். சிந்திக்கலாம். விவாதிக்கலாம். அதற்கான துவக்கமாக அது அமையும். 

என் மின்னஞ்சல் முகவரி : ulagelam (at) gmail (dot) com