Thursday 19 January 2023

வங்கிகள் : வாடிக்கையாளர்களும் ஊழியர்களும்

நம் நாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவை என்பது எப்போதுமே சர்ச்சைக்குரிய விதத்திலேயே உள்ளது. அடிக்கடி வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் ஒரு விஷயத்தை எளிதாக உணர முடியும் ; இங்கே வங்கி ஊழியர்களுக்கு தாம் சேவையாற்றும் இடத்தில் இருக்கிறோம் என்பதோ தாம் புரியும் பணி அல்லது சேவை நிதித்துறை தொடர்புடையது என்பதோ எப்போதும் அவர்கள் நினைவில் இருப்பதில்லை. அவர்கள் அனைவருக்குமே ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தங்களை தங்கள் தொழிலாளர் யூனியன் காப்பாற்றும் என்ற நம்பிக்கை வலுவாக இருப்பதால் எவ்விதமான தார்மீகமும் இன்றி செயல்படுகின்றனர். 

பொதுமக்கள் வங்கிகள் மேல் நம்பிக்கை கொள்வது பெரிய அளவில் குறைந்திருக்கிறது. இந்நிலை வங்கிகளுக்கும் நல்லதல்ல ; வங்கி ஊழியர்களுக்கும் நல்லதல்ல.