Tuesday 4 April 2023

கோடைமழை

நேற்று இங்கே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நல்ல மழை பொழிந்தது. மழையின் ஒலி கேட்கத் துவங்கியதும் மனம் செயல் புரியும் கிராமத்தில் இருக்கும் தேக்கு மரங்களுக்கு போதிய ஊட்டம் கிடைக்கும் என்ற எண்ணத் துவங்கியது. விவசாயியின் மனநிலை. விவசாயி பயிர் வளர்க்கும் போது குறிப்பிட்ட சில நாட்கள் மழை இல்லாமல் இருப்பது அதிக மகசூலுக்கு உதவி செய்யும். நெற்பயிர் பூ வைக்கும் சமயத்தில் மழை பெய்தால் பூக்கள் உதிர்ந்து விடும் ; பூ கதிராக மாற வேண்டியது. ஆகவே அந்த சமயத்தில் மழை ஆபத்து. கதிர் முற்றியிருக்கும் நிலையில் மழை பெய்தால் பயிர் மண்ணில் சாய்ந்து விடும். எனவே இந்த இரு காலகட்டங்களிலும் மழை இல்லாமல் இருக்க வேண்டும். மரங்களுக்கு அப்படியில்லை ; எல்லா காலகட்டத்திலும் மழை மரங்களுக்குப் பயன்படும். குறிப்பாக தேக்குக்கு. மழை நீர் உடனே வடிந்து விடவும் வேண்டும். அதற்காகத்தான் மேட்டுப்பாத்தி முறையில் தேக்கு நடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.