Wednesday 6 September 2023

தனிப்பெருங்கருணை

 தனிப்பெருங்கருணை

---------------------------------------

மண்ணில் நிலை கொண்டுள்ளன கால்கள்
பாதத்தில் ஒட்டிக் கொள்கின்றன மண் துளிகள்
பெருந்தோள்களில் அமர்ந்து கொள்கிறது வானம்
முதற்பெரும் ஒலியில் மூழ்கியிருக்கிறான் அருகன்
தாகமும் பசியும் கொண்ட புல் ஒன்று 
மேகங்கள் அற்ற
துல்லியமான வானைத் தீராமல் பார்க்கிறது
நீரைப் பிரசவிக்க கணம் வாய்க்கிறது வானுக்கு
பொழிகிறது
புல்லை உயிர்ப்பிக்கும் மழை