அன்புள்ள பிரபு அண்ணா,
தங்கள் உண்ணாவிரத நாட்குறிப்புகளை தினமும் வாசிக்கிறேன்.
‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக சலூன்களுக்கு நூல்களை வழங்கியது ஓர் நற்செயல். அதற்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
21 நாள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என முடிவெடுத்து செயல்படுத்தி வருவதற்கும் எனது வாழ்த்துக்கள்.
நான்கு நாட்களாக நானும் இரவு உணவைத் தவிர்த்து விட்டேன். பசி என்பதையும் பசி என்றால் என்ன என்பதையும் உணர முடிகிறது.
அன்புடன்,
கதிரவன்