மும்பையில் உள்ள ஒரு குடும்பம். பெற்றோரும் இரு மகள்களுமாக நான்கு பேர் வீட்டின் உறுப்பினர்கள். தந்தை வணிகர். தாயார் இல்லத்தரசி. பத்தாம் வகுப்பு படிக்கும் அவர்களின் பதினாறு வயது மகள் 110 நாட்கள் நீர் மட்டும் அருந்தி உண்ணாவிரதமிருந்திருக்கிறார். முதலில் 16 நாட்கள் விரதமிருக்கத் திட்டமிட்டிருக்கிறார். திட்டமிட்டவாறு 16 நாள் விரதம் நிகழ்ந்திருக்கிறது. மேலும் உண்ணாவிரதத்தைத் தொடர விரும்புவதாக தனது குருநாதரிடம் தெரிவித்திருக்கிறார். குருவின் அனுமதியின் பேரில் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்திருக்கிறார். விரத தினங்களில் முழுமையாக வழிபாட்டிலும் பாராயணத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.
அந்த குழந்தையை வணங்குகிறேன்.