Saturday 25 November 2023

மறைக்கப்படும் உண்மைகள்

 

{ஒரு மாதம் முன்பு பள்ளி வளாகம் ஒன்றில் இருந்த மரம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு இன்றி வெட்டப்பட்டு பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது. நடைபெற்ற இச்செயலுக்கு முழுப் பொறுப்பும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரைச் சேர்ந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு மனு அனுப்பினேன். மத்திய அரசின் சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்திலும் புகாரைப் பதிவு செய்தேன். அந்த விஷயம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எனக்கு குறுஞ்செய்தி வந்தது. தளத்தில் சென்று பார்த்தேன். ‘’எடுக்கப்பட்ட முடிவு’’ என்ற பிரிவில் ‘’ PLEASE SEE THE ATTACHED FILE'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் எந்த கோப்பும் இணைக்கப்படவில்லை. மேற்படி சி.பி.கி.ரா.ம்.ஸ் புகார் எண்ணைத் தெரிவித்து தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி அந்த கோப்பை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளேன்.}



அனுப்புநர்


ர.பிரபு
&&&&&

பெறுநர்

பொது தகவல் அதிகாரி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா,

பொருள் : தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கோரி விண்ணப்பம்

பார்வை : சி.பி.கி.ரா.ம்.ஸ் புகார் எண் : &&&&&&&

மேற்படி புகார் என்னால் மத்திய அரசின் சி.பி.கி.ரா.ம்.ஸ் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்த நாள் : 15.10.2023. அந்த புகார் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்திலிருந்து குறுஞ்செய்தி 25.11.2023 அன்று கிடைக்கப் பெற்றது. எனது புகாரின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிய சி.பி.கி.ரா.ம்.ஸ் தளத்துக்குச் சென்று பார்த்தேன். எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற விபரத்தில் ‘’ PLEASE FIND THE ATTACHED FILE'' என இருந்தது. ஆனால் அதில் எந்த ‘’FILE''ம் இணைக்கப்படவில்லை. 

மேற்படி புகாரின் மீது எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கையை சி.பி.கி.ரா.ம்.ஸ் இணைய தளத்தில் பதிவு செய்யாததால் எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை விபரத்தை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோருகிறேன். அதற்கான கட்டணம் ரூ.10 ஐ  மனு வில்லையாகச் செலுத்தியுள்ளேன். 

தங்கள் உண்மையுள்ள,


இடம் : மயிலாடுதுறை
நாள் : 25.11.2023

இணைப்பு
1. புகார் எண் &&&&&  குறித்த சி.பி.கி.ரா.ம்.ஸ் பக்கத்தின் நகல்