Saturday 9 December 2023

சேலம் / விஸ்வகர்மா பதிவுகள் - கடிதம்

அன்புள்ள அண்ணா,

உங்கள் பதிவுகளை படித்தேன். சேலம் பகுதியில் ’’காவிரி போற்றுதும்’’ பணிகளைத் துவக்குவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. வாழ்த்துக்கள்.  

~~~~~

விஸ்வகர்மா பெண்கள், உறங்கி கொண்டு இருக்கும் இந்தியாவின் தங்கம் பற்றிய பதிவும் படித்தேன். தேவதத் பட்நாயக் பொதுவாக எல்லா உலக mythology பற்றி எழுதுபவர். அவர் இந்தியாவில் மட்டும் தான் பணம்/ செல்வத்தின் தெய்வம் ஒரு பெண்ணாக இருக்கிறாள் - லக்ஷ்மி - என்று சொல்கிறார்.

பணம்/ செல்வம் நம் கையில் உள்ள வரை ஒரு மதிப்பும் அற்றது. அது இருக்கிறது - அவ்வளவு தான். எப்போது அது நம் கையை விட்டு விலகுகிறதோ அப்போது அதன் மதிப்பு உறுதி ஆகிறது. 

மகள் வீட்டை விலகி திருமணம் ஆகி போகும் போது பிறந்த வீட்டின் மதிப்பை விளங்க செய்கிறாள். 

இந்த தொடர்பு இந்தியாவின் தெய்வமாகிய லட்சுமியை குறிக்கிறது. 

அவள் நிலம் ஆளும் நாராயணனை நீங்காதிருகட்டும்.

நன்றி

அன்புடன்,
பெரியண்ணன்