Friday 19 January 2024

பால காண்டம்

ஓரிரு நாட்களுக்கு முன், ஒரு சிறு குழந்தை பாடும் சங்கீதத்தைக் காணொளிகளில் கண்டேன். அந்த குழந்தை 4 வயதிலிருந்தே பாடல் பாடுவதை அறிந்தேன். நான் இசை கேட்டு பழகியவனில்லை. எனினும் என்னுடைய செவிகளிலும் அக்குழந்தையின் குரல் தேவாமிர்தமாக ஒலித்தது. இப்போது அந்த குழந்தைக்கு 7 வயது. 

அக்குழந்தையின் நேர்காணல்கள் சிலவற்றைக் கண்டேன். பேட்டி எடுப்பவரிடம் அக்குழந்தை நாம் சேர்ந்து ஒரு பாடல் பாடலாமா என்கிறது. பேட்டி காண்பவர் நான் இசை அறியாதவன் என்கிறார். நான் உங்களுக்கு கற்றுத் தருகிறேன் என்று கூறி ஏழு ஸ்வரங்களை சொல்லித் தருகிறது அக்குழந்தை. அதன் இசை ஆசிரியர் அதனிடம் பாடம் நடத்தும் முறையில் பேட்டி எடுப்பவரிடம் கற்றுத் தருகிறது. ‘’பிராக்டிஸ் செஞ்சா சரியா வரும்’’ என நம்பிக்கையூட்டுகிறது. 

தெய்வங்கள் குழந்தையாப் பிறந்து தவழ்ந்து வாழ்ந்த சிறப்பு கொண்டது நம் மண்.