Wednesday 13 March 2024

அரசமரம் - சட்ட விரோத மரம் வெட்டுதல் - புகார் மனு

 ஊருக்கு அருகில் இருக்கும் சிறு கிராமம். அதில் கிராமச் சாலையில் அமைந்திருந்த 20 வயது கொண்ட அரசமரம். நேற்று மாலை வெட்டப்பட்டதாக இன்று காலை தகவல் அறிந்தேன். மரம் வெட்டப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்த்த பின் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒரு மனு அனுப்பினேன். அந்த மனுவின் தமிழாக்கம் கீழே : 

அத்தனை பிரும்மாண்ட மரத்தை வெட்ட எப்படி மனம் துணிகிறது ? ஒரு அரசமரம் என்பது எவ்வளவு பெரிய உயிர் ? எத்தனை உயிர்களுக்கு வாழ்விடமாகவும் உணவாகவும் விளங்கக் கூடியது? 

முக்கால் பாகம் வெட்டப்பட்டு விட்டது. மீதி கால் பாகம் மூலம் மீண்டும் மரத்தை துளிர்க்க வைக்க முயல வேண்டும். 

*****

அனுப்புநர்

ர.பிரபு
***********
******
*****

பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட பசுமை கமிட்டி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா,

பொருள் : அரசமரம் வெட்டப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய கோரிக்கை மனு
பார்வை : ************ கிராமம் - மயிலாடுதுறை வட்டம்

******* கிராமத்தில் அமைந்திருந்த 20 ஆண்டு வயது கொண்ட அரசமரம் நேற்று ( 12.03.2024) வெட்டப்பட்டிருக்கிறது. 

வெட்டப்பட்ட மரத்தின் அமைவிடம் : வெட்டப்பட்ட மரம் பெட்ரோல் பங்க்கிற்கும் கிராமத்துக்குக் குளத்துக்கும் அருகாமையில் அமைந்துள்ளது. பெட்ரோல் பங்க்கிற்கு மேற்கு . கிராமத்துக் குளத்துக்கு கிழக்கு. 

வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு : ரூ. 25,000 க்கு மேல்

இந்த புகார் மனுவின் மூலம் மேற்படி மரம் வெட்டப்பட மாவட்ட பசுமை கமிட்டியின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு அனுமதி பெறப்படவில்லை எனில் அது சட்ட விரோதமாக மரம் வெட்டுதல் ஆகும். அரசமரம் சட்ட விரோதமாக வெட்டப்பட்டிருந்தால் வெட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,

****

இடம் ; மயிலாடுதுறை
நாள் : 13.03.2024

நகல்

1. வருவாய் கோட்டாட்சியர் , மயிலாடுதுறை

2. வருவாய் வட்டாட்சியர், மயிலாடுதுறை