ஏரிக்கரையில் அமைத்த வீட்டில் பல நாட்கள் பல பகல்கள் பல இரவுகள் கொட்டும் மழையை மட்டும் கண்டவாறு அமர்ந்திருக்கிறேன். இனிமையானது ஏகாந்தம். ஏகாந்தத்தில் நாம் பிரபஞ்சம் முழுமையும் நம்முடன் இணைந்து இருப்பதை உணர்கிறோம். கோள்கள், வான்மீன்கள், சூரியன், நிலவு என அனைத்தும் நம் உடன் இருக்கின்றன. மானுடர் தனித்திருக்க வேண்டும்.