அதிகாலைப் பொழுதிலிருந்து பறவைகள் கிரீச்சிடத் தொடங்குகின்றன. காகங்கள், குயில்கள், கரிச்சான்கள், புறாக்கள், மைனாக்கள் என புள்ளினங்கள் சிலம்பத் தொடங்குகின்றன. மனித மொழி குறிப்பிட்ட விதமான சப்தங்களுக்குள் கட்டுண்டிருக்க புள்ளினங்களின் சிலம்பல்கள் விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. புள்ளின சிலம்பல்களைக் கேட்டவாறு நாள் முழுதும் அமர்ந்திருப்பது ஒரு நிலை.