பதின் வயது சிறுமி ஒருத்தி பெண்கள் விடுதி ஒன்றில் இருந்து கொண்டு பள்ளிப்படிப்பை படிக்கிறாள். அவளது பாடத்தில் ‘’மேரியின் ஆட்டுக்குட்டி’’ என்ற பாடல் வருகிறது. சிறுமி சிறு வயதில் ஏமாற்றப்பட்டு கர்ப்பமடைந்து ஒரு குழந்தையை ஈன்றவள். மேரியின் ஆட்டுக்குட்டி பாடலுக்கும் அவள் வாழ்வுக்கும் ஒற்றுமைகள் பல இருக்கின்றன. துயரம் வெவ்வேறு வகைகளில் சூழ்கிறது அவள் வாழ்வை. அவளுக்கு மீட்பு என நிகழ்ந்தது எது என்னும் கேள்வியை சிறுகதையாக்கி உள்ளார் தி.ஜா