அவதானம் 1
புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு அஞ்சல்துறை கண்காணிப்பாளர் துணை அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருக்கிறார். 43 நாட்கள் கடந்த பின்னும் 06.12.2024 வரை விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. 06.12.2024 அன்றும் அந்த புகார் சி.பி.கி.ராம்.ஸ் உடன் இணைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவதானம் 2
19.10.2024ல் புகார் அனுப்பப்பட்ட பின் ஒப்புகைச்சீட்டு விவகாரத்துடன் தொடர்புடைய ஊழியர்களிடம் எழுத்துப்பூர்வமான விளக்கம் கோரப்படவில்லை என்பதை ஆர்.டி.ஐ தகவல் மூலம் அறிய நேர்கிறது.
அவதானம் 3
அக்டோபரில் நான் அளித்த புகார் ஒரு நிகழ்வு. நவம்பரில் நான் அளித்த சி.பி.கி.ராம்.ஸ் புகார் இன்னொரு நிகழ்வு. இரண்டுமே ஒப்புகைச்சீட்டு விவகாரம் என்றாலும் இரண்டும் இரண்டு தனித்தனி நிகழ்வுகள்.