மனைவி ஒரு தவறு செய்கிறாள். சிறிய மிகச் சிறிய தவறு தான். கணவன் அவளை மன்னித்திருக்கலாம். எப்போதும் பெருந்தன்மையாக இருக்கும் கணவன் தான். எனினும் அந்த முறை மன்னிகாமல் சிறு தண்டனை அளிக்கிறான். அந்த தருணத்தில் அவள் பிரசவத்துக்காக தாய்வீடு செல்கிறாள். சிறு பிணக்குகள் அவள் திரும்பி வரும் போது ஒன்றும் இல்லாமல் போயிருக்கும் என எல்லாரும் எண்ணுகிறாள். சில வாரங்களில் அவனுக்கு ஒரு தந்தி வருகிறது ; பிரசவத்தில் தாயும் சேயும் மரணித்தார்கள் என. இதுவே தி.ஜா வின் ‘’நரை’’ சிறுகதை.