காவிரி டெல்டா பகுதிகளின் முக்கிய தொழில் விவசாயம். அந்த பகுதியில் வணிகம் செய்பவர்களின் நுகர்வோர் விவசாயிகளே. எனவே அங்கு நிலப் பிரபுத்துவ இயல்புகள் தவிர்க்க முடியாதவை. இதனைப் பயன்படுத்தி சோம்பல் மிகுந்திருக்கும் இயல்பு கொண்ட ஆனைக்குப்பம் ஊர்காரர்கள் மேற்கொள்ளும் சிறு சிறு ஏய்ப்புகளே தி.ஜா வின் ‘’ஆனைக்குப்பம்’’ கதை.