நல்லன அல்லன இரண்டும் இருப்பது இவ்வுலகம். முயற்சிக்காமல் கூட வந்து ஒட்டிக் கொள்கின்றன அல்லன. நல்லனவற்றைப் பழகிக் கொள்ளவும் நிலை நிறுத்திக் கொள்ளவும் பெரு முயற்சி தேவைப்படுகிறது. நல்லனவற்றைப் பழகிய ஒருவன் அல்லனவற்றைப் பழகிய ஒருவனை மன்னிக்கிறான். இதுவே தி.ஜா வின் ‘’மன்னித்து விடு’’ சிறுகதை.