1960களின் காலகட்டம் இந்திய சமூகத்தின் வறுமையின் காலகட்டம். இன்று அதனைக் கற்பனை செய்வது கடினம். இந்திய சமூகம் தன் கடந்த கால நினைவுகளுடனே வறுமையை எதிர்கொண்டது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் வறியவர்களுக்கும் திருமணச் செலவு என்பது ஒரு பெரும் மலை போல பாதையில் வந்து நிற்பது. அதனைக் கடந்தே ஆக வேண்டும். இந்த பின்னணியில் தி.ஜா எழுதிய கதை ‘’மாப்பிள்ளைத் தோழன்’’.