மண்ணாசையும் பொன்னாசையும் பிடித்த ஒருவனை பெண்ணாசை பெரிதாக ஆட்கொள்கிறது. அவன் விரும்பிய பெண் அளிக்கும் நறுமணம் நிரம்பிய சட்டையை அணிந்து கொள்கிறான். அந்த சட்டையின் நறுமண திரவியத்தில் விஷம் இடப்பட்டுள்ளது. அணிந்தவன் சரீரத்தை ஊடுறுவி ரத்தத்தில் கலந்து அவன் உயிரை மாய்க்கிறது. இதுவே தி.ஜா வின் ‘’மணச்சட்டை’’கதை.