Wednesday, 26 February 2025

பணக்காரன்

பொருள் சேர்த்தல் என்பதும் பொருள் சேர்தல் என்பதும் தனியான விஷயம் அல்ல. சுற்றத்தின் அம்சம் என்பது அதில் நுண் அளவிலேனும் உண்டு. ஏழை அதனை அறியாது கூட இருக்கலாம். செல்வந்தன் அறிந்தே ஆக வேண்டிய விஷயம் அது. செல்வந்தன் ஒருவன் பொருள் சேர்தலின் அடிப்படை விதிகள் குறித்த உணர்வு இல்லாமல் தன்னை மொய்க்கும் நபர்களுடன் இணைந்து உல்லாசமாக இருக்கிறான். குறுகிய காலத்தில் காட்சி மாறுகிறது. எல்லா செல்வமும் இழந்து பரம ஏழையாகிறான். தி.ஜா வின் ‘’பணக்காரன்’’கதை இதுவே.