Thursday, 27 February 2025

இக்கரைப் பச்சை

நற்குணம் கொண்ட மனைவி வாய்க்கப் பெற்றவன் ஒருவன் எனினும் நடுத்தரவர்க்க ஆசாமி. நற்குணம் கொண்டிராத மனைவி வாய்க்கப் பெற்றவன் ஒருவன் செல்வந்தன். செல்வந்தனின் ஒரு நாள் பொழுதில் அவன் மனைவி உண்டாக்கும் படுகளம் சூழ்ந்திருப்பவர்களை அதிர்ச்சி கொள்ள செய்கிறது. இதுவே தி.ஜா வின் ‘’இக்கரைப் பச்சை’’ கதை.