இளம் பெண் ஒருத்தி வயசாளி ஒருவனைத் திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. தான் எடுத்த முடிவு சரியில்லையோ என சஞ்சலம் கொள்கிறாள். அந்த சஞ்சலம் அவள் மனதை ரண வேதனை கொள்ளச் செய்கிறது. தவிக்கிறாள். அலை பாய்கிறாள். எதிர்பாரா கணம் ஒன்றில் அந்த வயசாளி அவள் மேல் கொண்டிருக்கும் தீராக் காதலை உணர்ந்து கொள்கிறாள். இதுவே தி.ஜா வின் ‘’பசி ஆறிற்று’’ கதை.