மரணப் படுக்கை என்பது ஓர் அவஸ்தை. சாவு எப்போது என்ற எதிர்பார்ப்பு ம் கேள்வியும் சுற்றி இருப்பவர்களுக்கு உருவாகி விடும். அதைக் கடந்து சென்று நோயாளிக்கு சேவை செய்யும் மனநிலை லட்சத்தில் ஒருவருக்கே வாய்க்கிறது. மரணப் படுக்கையில் இருக்கும் ஒரு கிழவியின் கதையை எழுதிப் பார்க்கிறார் தி.ஜா ‘’அன்பு வைத்த பிள்ளை’’ சிறுகதையில்.