Thursday, 6 February 2025

காபி

பள்ளியில் சிறுவர்களாக இருக்கும் இரு மாணவர்கள். ஒருவன் செல்வந்தன். இன்னொருவன் வறியவன். இருவருக்குமே அன்னை மேல் பெரும் பிரியம். காலச் சக்கரம் சுழல்கிறது. ஒரு மாணவன் முதலாளியாகவும் இன்னொரு மாணவன் அவனது சமையல்காரனாகவும் இருக்கிறார்கள். சமையல்காரனுக்கு முதலாளி தன் வகுப்பு மாணவன் என்பது தெரியும். முதலாளிக்குத் தெரியாது. ஒரு சந்தர்ப்பத்தில் தெரியவருகிறது. அப்போது அந்த இரண்டு பால்ய சினேகிதர்களும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதே தி.ஜா வின் ’’காபி’’.