ஆதி காலத்தில் சமூகங்கள் பெண் கவர்தலை ஓர் இயல்பான வழக்கமாக மேற்கொண்டிருக்கின்றன. ஓஷோ சொல்வார், அத்தகைய பெண் கவர்தல் இயல்பு இருப்பதால் திருமணம் நிச்சயிக்கும் சம்பந்திகளுக்குள் இன்றும் சிறு சிறு பிணக்குகளும் பூசல்களும் இருக்கின்றன என்று. சமீபத்தில் திருமணம் நிகழ்ந்த தம்பதிகளுக்குள் ஏற்படும் ஊடலையும் அதைத் தொடர்ந்த கூடலையும் கதையாக்கி இருக்கிறார் தி.ஜா, ‘’ஜயத்தின் பயம்’’ கதையில்.