தி.ஜா தனது சிறுகதைகளில் பிராணிகளையும் பறவைகளையும் கதாபாத்திரமாக்க விரும்பியிருக்கிறார். பூனை இணை ஒன்று வீட்டில் வசிக்கிறது. அந்த வீட்டில் கணவன் மனைவியும் வசிக்கிறார்கள். தம்பதிகள் பூனை இணைகளின் இணக்க விலக்கத்தையும் பூனை இணைகள் தம்பதிகளின் இணக்க விலக்கத்தையும் கண்டு நிகழ்த்திக் கொள்ளும் உரையாடலே தி.ஜா வின் ‘’வித்தியாசம்’’ கதை.