ஒரு முதியோனுக்கு இளையாளாக வாழ்க்கைப்பட்டு வருகிறாள் ஓர் இளம்பெண். ஓயாத சண்டை சச்சரவு. கணவனுக்கு போதுமான ஊதியமும் இல்லை. இளம் மனைவி தன்னை அந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற்றிக் கொள்கிறாள். வெளியேறிய அவளின் பொருளாதார சூழ்நிலை மேம்படுகிறது. கணவனுக்கு மாதா மாதம் ஒரு தொகையை அனுப்பி வைக்கிறாள் ஜீவனாம்சமாக. இதுவே தி.ஜா வின் ‘’ஜீவனாம்சம்’’ கதை.