Saturday, 1 March 2025

கடன் தீர்ந்தது

 கடன் நெருப்பு பகை மூன்றையும் மிச்சமில்லாமல் அழிக்க வேண்டும். மிச்சம் வைத்தால் நாம் எதிர்பார்க்காத வண்ணம் பேரழிவை உண்டாக்கி விடும். நல்ல மனிதன் ஒருவனை சூழ்ச்சியில் சிக்க வைத்து பெருநஷ்டமடையச் செய்கிறான் துர்குணம் கொண்ட ஒருவன். துர்குணம் கொண்டவன் மோசடி செயல்பாடுகளுக்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறை சென்று உடல்நலம் குன்றி சாகக் கிடக்கிறான். நற்குணம் வாய்ந்தவன் துர்குணம் கொண்டவனின் மரணத் தறுவாயில் அவனிடம் வந்து நீ செய்த துரோகத்தை மன்னித்தேன் எனக் கூறி துர்குணம் கொண்டவன் பட்ட கடனிலிருந்து பாபத்தின் சுமையிலிருந்து விடுவித்துச் செல்கிறான் என்பதே தி.ஜா வின் ‘’கடன் தீர்ந்தது’’