ஒரு பெண்ணின் அழகு மீது பற்று கொள்கிறான் ஒருவன். அந்த பற்று அவன் வாழ்வை அகத்தை தீவிரம் கொள்ளச் செய்கிறது. அவளுக்காக வெளிநாடு சென்று வேலை செய்து பொருள் ஈட்டுகிறான். இப்படி ஒருவன் இருப்பதோ அவன் தன் மீது கொண்ட ஆசையால் இயக்கப்படுவதோ அவளால் அறிந்திருக்கப்படவேயில்லை. பல ஆண்டுகள் கழித்து அவளைக் காண வருகிறான். அவள் தோற்றம் பெரிதும் மாறியிருக்கிறது. முதுமை வழக்கமான வேகத்தை விட கூடுதல் வேகத்தை அவள் விஷயத்தில் காட்டியிருந்தது. அவன் திகைத்து நிற்கிறான். அவளுக்கும் அவன் வேட்கையின் தீவிரம் குறித்து திகைப்பு. இருவரும் அந்த சந்திப்பை நிறைவு செய்து பிரிகிறார்கள். இதுவே தி.ஜா வின் ‘’தவம்’’. அந்த பெண் கூறுகிறாள் : ’’அற்ப விஷயத்துல மனசு வச்சு ஈடுபட்டா வலிதான் மிஞ்சும்’’.